Monday, October 29, 2007

தீவு தந்த வரவேற்புக்கு நன்றி

உள்குத் தென்ன உள்குத்து
உலக்கைக் குத்துங் கண்டவர்கள்
கல்குத்(து) தென்றும் பார்க்காமல்
கடற்கரை வயற்கரை நடந்தவர்கள்

முள்குத் துவதுந் தெரியாமல்
முழுசாய் மீனைத் தின்றவர்கள்
கள்ளுக்காகப் பனை தென்னை
கடற்கரை மணலிற் கசிப்பண்ணை

பல்குத் தப்பனை தென்னீர்க்கு
பழகுவதற்கோ பனங் கொட்டை
நல்வர வெனக்குச் சொன்னீர்கள்
நன்றி நன்றி தீவாரே

+/- ஞானமேகம்

No comments: